சென்னை: தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் ஜுலை 18ம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; தமிழகத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு 6 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வேட்புமனு தாக்கல் ஜுலை 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியை சேர்ந்த வைகோ உள்ளிட்ட 3 வேட்பாளர்கள் இன்று தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனுவை வாபஸ் பெற விரும்பினால் ஜுலை 11ம் தேதி கடைசி நாள். ஜுலை 18ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன், அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அதேநாள் இரவிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.

உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில், திமுக கூட்டணி சார்பாக 3 பேரும், அதிமுக கூட்டணி சார்பாக 3 பேரும் தேர்வு செய்யப்படுவர். ஒரு ராஜ்யசபா உறுப்பினரை தேர்வுசெய்ய 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.