சென்னை:

ள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் தினசரி வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதன்படி, தற்போது ஒரே  வளாகத்திற்குள் இருக்கும், மேல்நிலைப்பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளி கள், நடுநிலைப் பள்ளிகள் இணைந்து ஒரே தலைமையாசிரியரின் கீழ் செய்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு மாநகராட்சி நகராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி, நடுனிலை பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குதல் தொடர்பாக ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டு உள்ளது.

அதில், தொடக்கப் பள்ளிகளில், குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி, பாடம் நடத்தலாம்.

மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகம், விளையாட்டு மைதானம்,  ஆய்வகம், நுாலகம், ‘ஸ்மார்ட் வகுப்பு ஆகியவற்றை, தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தலாம்.

மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உபகரணங்கள் வழியே, தொடக்க கல்வி மாணவர்களின் விளையாட்டு திறமையை மேம்படுத்தலாம்.

மேலும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்றல் திறன், வருகை பதிவு, விடுப்பு வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல் போன்றவற்றை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளியின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ப தில்லை. மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை, விளை யாட்டு மைதானம், ஆய்வகம் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.

இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்துள்ளன. மேலும்,  பல தொடக்கப் பள்ளிகளில் மூத்த ஆசிரியர்கள், அனுபவ அடிப்படையில், தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருப்பர். இவர்கள் அவ்வப்போது மீட்டிங் அது இது என்று ஏதாவது சாக்குப்போக்கு கூறிவிட்டு, பள்ளியில் இருந்து எஸ்கேப்பாகி விடுகின்றனர். , தங்கள் விருப்பத்துக்கேற்ப விடுமுறை எடுப்பது, வகுப்புகளை,’கட்” அடிப்பது போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடுவதாக, புகார்கள் எழுகின்றன.

இது குறித்து, பள்ளி கல்வித் துறை விசாரணை நடத்தி, தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர் களின் கல்வி தரம் உயரும் வகையில், புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது.

இது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.