சென்னை
நாடெங்கும் உள்ள யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தமிழ்நாட்டில் 30% குறைந்துள்ளது.
மத்திய அரசு யானைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளது. அந்தத் தகவல்களை கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்கள் அவையில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு :
நாடெங்கும் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 30% யானைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடஙக்ளில் குறைந்துள்ளது.
அந்த விவரம் வருமாறு
மாநிலம் 2012 2017 வித்தியாசம்
கேரளா 5942 3054 2888
தமிழ்நாடு 4015 2761 1254
கர்நாடகா 6488 6049 439
ஆந்திரப் பிரதேசம் 45 61 +16
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.