சவூதி அரேபியாவில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு 150 ஆண்/ பெண் செவிலியர்கள்  ( ஹீமோடயாலிசிஸ் செவிலியர் ) தேவைப்படுவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நர்சிங் படிப்பில் பிஎஸ்சி/டிப்ளமோ  தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்றவர் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 150 பணியிடங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப மாதம் ரூ.55,000/- ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு, மருத்துவகாப்பீடு முதலியவை  அளிக்கப்படும்.

விருப்பமும் தகுதியும் உள்ள செவிலியர்கள் www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்திற்குச் சென்று  18.5.2017க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்த மனுதாரர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்

மேலும் விவரங்களுக்கு 044-22505886/22502267/22500417 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் .