சென்னை:

பொறியில் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்குகிறது.


பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி தொடங்க இருந்த நிலையில், தரவரிசை பட்டியல் தாமதத்தின் காரணமாக 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு, ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர்.

மேலும் சிலர் சான்றிதழ்களை சமர்பித்து வருவதால், சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் இன்று வெளியாக இருந்த தரவரிசை பட்டியல் வரும் 20-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலந்தாய்வும்  25-ம் தேதிக்கு  மாற்றப்பட்டுள்ளது.