சென்னை:

மிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளிக்கான பொறியியல் கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி, பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. வியாழக்கிழமை,19-வது நாளாக கலந்தாய்வு நடைபெற்றது.

நடைபெற்று வரும் கலந்தாய்வில் பெரும்பாலும் 50 சதவிகித மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள்.

19 நாள்கள் முடிவில் 83,562 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. முக்கியமாக 46,818 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், தற்போதுவரை 91,894 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

அரசு பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. அதேபோல அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. தனியார் கல்லூரிகளின் நிலமை கேள்விக்குறியாகி வருகிறது.