சென்னை:

ண்ணா பலைக்ககழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து வரும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் தேர்வெழுத கடைசி வாய்ப்பு வழங்கி உள்ளது.

அதன்படி, 10ஆண்டுகளுக்கு மேலாக அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் தேர்வெழுதி பயன்பெறலாம் என்று அறிவித்து உள்ளது.

பொறியியல் படிப்புகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வெழுதி அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  அரியர் தேர்வுகளை வரும் நவம்பர், டிசம்பரில் எழுதலாம், இதுவே கடைசி வாய்ப்பு  என்று அண்ணா பலைக்கழக பதிவாளர் குமார் தெரிவித்து உள்ளார்.

2001ம் ஆண்டுக்கு பிறகு பி.இ. முடித்து ஓரிரு பாடங்கள் அரியர் வைத்ததன் காரணமாக பட்டம் பெறாமல் இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் தேர்வு எழுத கடைசி வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இதனால் 30 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப இந்த ஆண்டு பி.இ. மற்றும் எம்.இ. பாடத்திட்டங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,  இந்தாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டண உயர்வு அரசின் ஒப்புதல் கிடைத்தால்  நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார். தற்போதைய கட்டணம் ரூ.6 ஆயிரத்தை  ரூ.20 ஆயிரமாக நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.