லண்டன்: இங்கிலாந்து நிர்ணயித்த 232 ரன்கள் என்ற எளிமையான இலக்கை எட்டமுடியாமல், 2வது ஒருநாள் போட்டியில் தோற்றுப்போனது ஆஸ்திரேலியா.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் ஒருவர்கூட அரைசதம் அடிக்கவில்லை.

இந்நிலையில், இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி எளிதில் கடந்து, ஒருநாள் தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலைமையோ வேறானது.

கேப்டன் ஆரோன் பின்ச் 73 ரன்களும், மார்னஸ் 48 ரன்களும், அலெக்ஸ் கேரே 36 ரன்களும் எடுத்த நிலையில், வேறுயாரும் கைகொடுக்கவில்லை. இறுதியில், 48.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 207 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஆஸ்திரேலியா அணி.

இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் குர்ரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடில் ரஷித் எஞ்சிய 1 விக்கெட்டை எடுத்தார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடர், தற்போது 1-1 என்ற நிலையில் சமனாகியுள்ளது.