லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளை இழந்து 551 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து.

எதிர்பார்த்ததைப் போலவே, ஜாக் கிராலே 267 ரன்களை அடித்துவிட்டுத்தான் ஓய்ந்தார். அவரின் விக்கெட்டை எடுத்தவர் அஸாத் சஃபீக். மற்றொருபுறம் எதிர்பார்த்ததைப் போலவே ஜோஸ் பட்லர் 152 ரன்களை எடுத்து ஃபவாத் ஆலம் அவுட்டானார்.

தற்போது, கிறிஸ் வோக்ஸ் 40 ரன்களுடன் களத்தில் உள்ளார். பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா மற்றும் ஃபவாட் ஆலம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

வலுவான ஸ்கோரை எட்டிவிட்ட நிலையில், இங்கிலாந்து அணி விரைவில் டிக்ளேர் செய்து, பாகிஸ்தானை பேட்டிங் செய்ய பணிக்கும் என்று தெரிகிறது.