அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட்டில், முதலில் பேட்டிங் செய்யும் இங்கிலாந்து அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஆட்டம் துவங்குவதற்கு முன்னதாக, தன்னம்பிக்கையுடன் பேசியவரும், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தவருமான ஜாக் கிராலே, 9 ரன்கள் எடுத்திருந்தபோது, அக்ஸார் பந்தில், முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியுள்ளார்.

இதற்கு முன்னதாக, மற்றொரு முக்கிய வீரர் டாம் சிப்லி 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஸார் பந்தில் பெளல்டு ஆனார்.

கடந்தப் போட்டிக்கான ஆடுகளத்தைப்போல், இந்த ஆடுகளமும் இருக்கும் என்றே சில செய்திகள் தெரிவித்தன. அப்படியிருந்தால், இங்கிலாந்தின் கதை இந்தப்போட்டியிலும் கந்தல்தான்!