அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், குளிர்பான இடைவேளை வரை, 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து.

அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ், ஓரளவு நிலைத்துநின்று ஆடி வருகிறார். அவர், தற்போதைய நிலையில் 95 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸர் & 5 பவுண்டரிகளுடன் 40 ரன்களை சேர்த்துள்ளார்.

சற்று நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோ, 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது, பென் ஸ்டோக்ஸ் உடன் ஓலி போப் ஆடிவருகிறார். அவர் 9 ரன்களை எடுத்துள்ளார்.

இந்திய அணியில், இதுவரை அக்ஸாருக்கு 2 விக்கெட்டுகளும், சிராஜுக்கு 2 விக்கெட்டுகளும் கிடைத்துள்ளன. தற்போது, வாஷிங்டன் சுந்தரும் பெளலிங்கில் களமிறக்கப்பட்டுள்ளார்.