காலே: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், மூன்றாம் நாள் ஆட்டரே முடிவல், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 339 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

தற்போது 1 விக்கெட் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், இலங்கையைவிட 42 ரன்கள் பின்தங்கியுள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்தின் கேப்டன் ஜோ ரூட் 186 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன்அவுட் செய்யப்பட்டார். ஜோஸ் பட்லர் 55 ரன்கள் அடித்தார். டாம் பெஸ் 32 ரன்கள் அடிக்க,‍ பேர்ஸ்டோ 28 ரன்கள் அடித்தார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து, 339 ரன்களை அடித்துள்ளது இங்கிலாந்து.

இலங்கை தரப்பில் லசித் எம்பல்டினியா 7 விக்கெட்டுகளை அள்ளினார். ரமேஷ் மெண்டிஸிற்கு 1 விக்கெட் மட்டுமே கிடைத்தது.