லண்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்டில், தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து அணி.
தற்போது தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் விண்டீஸ் அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்தார். ஜோஸ் பட்லர் 67 ரன்களையும், பர்ன்ஸ் 57 ரன்களையும், ஸ்டூவர்ட் பிராட் 62 ரன்களையும் அடித்தனர்.
விண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். கேப்ரியல் மற்றும் சேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
விண்டீஸ் அணியின் 4 விக்கெட்டுகளில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், பிராட் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். தற்போது 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.