லண்டன்: இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால், இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்புகின்றனர்.

இலங்க‍ை சுற்றுப்பயணம் சென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதாய் இருந்தது.

இங்கிலாந்து – இலங்கை லெவன் அணிகள் மோதிய 4 நாட்கள் பயிற்சி ஆட்டம் கொழும்புவில் நடந்து வந்தது. இந்நிலையில், அப்போட்டி முடியாத நிலையிலேயே திடீரென ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகள் மோதவிருந்த டெஸ்ட் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால், டெஸ்ட் தொடரை ஒத்திவைத்ததாகவும், வீரர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.