கேப்டவுன்: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.

இதன்மூலம், மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்று சமனில் முடிந்துள்ளது.

முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களே எடுத்தது. அந்த அணியின் டி காக் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தலா 69 ரன்களை அடித்தனர்.

பவுமா 29 ரன்களையும், ஸ்மட்ஸ் 31 ரன்களையும் அடித்தனர். இங்கிலாந்தின் அடில் ரஷித்துக்கு அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் கிடைத்தன.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து, 43.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஜோ டென்லி 66 ரன்களையும், ஜோ ரூட் 49 ரன்களையும், பேர்ஸ்டோ 43 ரன்களையும், பேன்டன் 32 ரன்களையும் அடித்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் லுங்கி மற்றும் ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முதலில் வெற்றியை நோக்கி எளிதாகப் பயணித்த இங்கிலாந்து அணி, பின்னர் கடைசி கட்டத்தில் திணறியே வெற்றிபெற்றது.