சென்னை: இந்தியாவுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணியினர், மொத்தம் 3 நாட்கள் மட்டுமே பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, வரும் பிப்ரவரி 5ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

தற்போது, பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் மற்றும் பர்ன்ஸ் உள்ளிட்ட 15 வீரர்கள் முதற்கட்டமாக சென்னை வந்திறங்கியுள்ளனர். இவர்கள், ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஜோ ரூட் தலைமையில், இன்னொரு குழுவினர், இலங்கையிலிருந்து நாளை சென்னை வந்திறங்கவுள்ளனர். அவர்கள் 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பர்.

அதன்பிறகு, வலைப்பயிற்சியில் 3 நாட்கள் மட்டுமே ஈடுபடுவர். அதற்கான அவகாசம் மட்டுமே அவர்களுக்கு உள்ளது. குறுகியகால பயிற்சியை அடுத்து அவர்கள் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.