சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்ததையடுத்து, விசாரணை நடத்த குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பாக அளித்த புகாரை விசாரிக்க கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோர் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ராஜேஷ் தாசுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி என்ற புதிய பதவி ஒதுக்கப்பட்டது சர்ச்சையானது, குறிப்பிடத்தக்கது.