2021 அமைதிக்கான நோபல் பரிசுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா, டொனால்டு டிரம்ப், நவல்கனி பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பட்டியலை பரிசீலிக்கும் நோபல் கமிட்டி குழு வரும் அக்டோபரில் நோபல் பரிசு பெருபவரின் பெயரை அறிவிக்கும். கடந்த ஆண்டு ஐ.நாவின் (UN) உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.

இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக (Nobel Peace Prize 2021) பரிந்துரைக்கப்படும் பெயர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.  அதில், அமெரிக்க முன்னாள் அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப், ரஷ்ய ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny),  சுற்றுசூழல் ஆர்வலரான சிறுமி  கிரேட்டா தன்பெர்க் (Greta Thunberg ), உலக பொது சுகாதார அமைப்பு (WHO) ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும்  இனவெறிக்கு எதிராக இயக்கமான ‘BLACK LIVES MATTER’ பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2020 மே மாதம் செய்திகளில் பிரபலமாகத் தொடங்கியது பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter) இயக்கம்.   இந்த இயக்கம் 2013ம் ஆண்டில் அமெரிக்காவில் நிறுவப்பட்டது அமைதியை வலியுறுத்தி தொடங்கப்பட்டது. 2020ம் ஆண்டு  அமெரிக்க காவல்துறையினரின் நடவடிக்கையில் ஜார்ஜ் ஃபிலாய்ட் (George Floyd) என்ற கறுப்பின நபரை இறந்ததையடுத்து இந்த இயக்கம் உலகம் முழுவதும் பிரபலமானது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump ) இரண்டாவது முறையாக இந்த பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசை வென்றவர்கள் ஆகியோர், அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கு தகுதி உடையவர் என தாங்கள் நினைக்கும் பல்வேறு பெயர்களை பரிந்துரைத்துள்ளனர்.