சென்னை,

முறைகேடுகள் செய்வதில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி தான் என்று திமுக செயல் தலைவர் கூறி உள்ளார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள நிவாரணம் மற்றும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,  தேனியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘நானும் ஓபிஎஸ் அவர்களும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்பட்டு அரசை வழிநடத்தி வருகிறோம் என்று பேசி உள்ளார், அது உண்மைதான். முறைகேடுகள்  செய்வதில் ‘இரட்டை குழல் துப்பாக்கி’ போல் செயல்பட்டு வருகின்றனர்.

அரசு செலவில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பெரும்பாலும் அரசியல் மட்டுமே பேசப்பட்டு வருகிறது, நேற்று நடைபெற்ற தேனி கூட்டத்தில், மழையைக் காரணம் காட்டி,  தேனி பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, பள்ளி மாணவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வரவழைத்துள்ளனர் என்றும் கூறினார்.