சென்னை:

கிறிஸ்தவர்களின் பண்டிகையான இயேசு உயிரிதெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை,  நாளை கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கிறிஸ்தவ மக்களக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஈஸ்டர் தினத்தை ஒட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

இறைமகன்‌ இயேசுபெருமான்‌ சிலுவைப்பாடுகளை ஏற்று மானிடத்தை மீட்க மரணத்தை வென்று மூன்றாம்‌ நாள்‌ உயிர்த்தெழுந்த ஒப்பற்ற விழாவாம்‌ ஈஸ்டர்‌ பெருவிழாவை கொண்டாடும்‌ கிறிஸ்தவ சகோதா, சகோதரிகளுக்கு எங்கள்‌ இதயமார்ந்த உயிர்ப்பு ஞாயிறு நல்வாழ்த்துகள்‌ உரித்தாகுக.

உலகையே அச்சுறுத்திக்‌ கொண்டிருக்கும்‌ கொரோனா நச்சுக்கிருமியை எதிர்த்து ஓரணியில்‌ நின்று போராடிக் கொண்டிருக்கும்‌ நாம்‌ “இருள்‌ அகலும்‌, ஒளி தோன்றி நம்மை
மகிழ்ச்சியுடன்‌ வாழவைக்கும்‌”என்னும்‌ புதிய நம்பிக்கையை தருவதாக இந்த ஆண்டின்‌ ஈஸ்டர்‌ பெருவிழா அமைகிறது.

சமூகத்தின்‌ நன்மைக்காக விழித்திருந்தும், தனித்திருந்தும்‌
வீட்டிலேயே இறைவழிபாடுகளை இந்த ஆண்டு மேற்கொண்டிருக்கும்‌ மக்களுக்கு
நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்‌.

இறைவனின்‌ கருணையும்‌, இரக்கமும்‌ நம்‌ அனைவாது உள்ளங்களிலும்‌ இல்லங்களிலும்‌ நிறைந்திடட்டும்‌.

இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.