டோக்கியோ: போக்குவரத்து, ஆற்றல் மற்றும் டிஜிட்டல் திட்டங்கள் ஆகியவற்றில் ஐரோப்பா மற்றும் ஆசியாவை இணைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது.

இந்த விஷயத்தில் சீனாவின் நடவடிக்கைகளுக்குப் போட்டியாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபி மற்றும் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாடே ஜன்கர் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இந்த கட்டுமான ஒப்பந்தத்தின் விளைவாக சுமார் 60 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய யூனியன் சார்பில் செலவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம். ஒரு சாலையாக இருந்தாலும், ஒரு துறைமுகமாக இருந்தாலும், இருதரப்பும் இணைந்து நீடித்த முறையிலான மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலான ஒத்துழைப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு முதல், 60க்கும் மேற்பட்ட நாடுகளில், ஏகப்பட்ட முதலீடுகளைக் கொட்டி உள்ட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது சீனா. தனது வர்த்தக மற்றும் ராணுவ நலன்களுக்காக இத்தகயை திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகிறது. எனவே, சீனாவுக்கு போட்டியானதாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.