டில்லி:  கூகுள் தேடு தள நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் ரூ. 17 ஆயிரத்து 425 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இணைய தேடு தளமான கூகுளில், பொருட்களின் விற்பனை சேவைகள் குறித்து தேடும்போது, தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக, புகார் எழுந்தது. இதையடுத்து கூகுள்  மீது, ஐரோப்பிய யூனியனின் நிறுவனங்கள் இடையேயான போட்டியை கண்காணிக்கும் அமைப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்குகளை ஏழு ஆண்டுகளாக விசாரித்து வந்த, ஐரோப்பிய யூனியன், கூகுள் நிறுவனத்துக்கு, 17 ஆயிரத்து, 425 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஒரு நிறுவனம் மீது, ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள அதிகபட்ச அபராதம் இதுதான்.

தன் தவறை, கூகுள் நிறுவனம், 90 நாட்களுக்குள் சீர் செய்யாவிட்டால், அதன்  தினசரி மொத்த வருவாயில், 5 சதவீதத்தை கூடுதல் அபராதமாக விதிக்கப்படும் என்றும், தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.