சென்னை
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கைகள் புழல் சிறையில் நிர்வாணமாக்கி சோதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.
நீட் தேர்வு காரணமாக அனிதா என்னும் மாணவி தற்கொலை செய்துக் கொண்டதை ஒட்டி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
இந்த போராட்டத்தில் திருநங்கைகள் நல செயலர் கிரேஸ் பானு, மற்றும், மோனல் என்னும் திருநங்கை, சுதர்சன், சாலம்ன், சிவக்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர். அவர்கலை கைது செய்து செப்டம்பர் 7ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறையில் இருந்த போது திருநங்கைகள் கிரேஸ் பானுவும் மோனலும் காவல்துறையினரால் நிர்வாணமாக சோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இரு பெண் காவலர்கள் உண்மையான திருநங்கைகளா என கண்டறிய இவ்வாறு சோதிக்கப்பட்டதாக கிரேஸ் பானு தெரிவித்தார்.