பாரிஸ்: சீனா, ஐப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளுக்கு தனது எல்லைகளை ஜூலை 1 முதல் திறந்துவிட்டுள்ளது ஐரோப்பிய யூனியன்.

ஆனால், இந்தப் பட்டியலில், தற்போது உலகின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உள்ள அமெரிக்கா இடம்பெறவில்லை. ஆனால், சீனா இடம்பெற்றுள்ளதானது ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.

அதேசமயம், இந்தப் பட்டியல் 2 வாரங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் என்றும், இதே சலுகையை, சீனாவும் ஐரோப்பியர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் உருகுவே போன்ற நாடுகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அதேசமயம், இந்த முடிவிற்கு இறுதி அனுமதியும் பெறப்பட வேண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அல்ஜீரியா, ஜார்ஜியா, ஜப்பான், மான்டநீக்ரோ, மொராக்கோ, ருவாண்டா, செர்பியா, தென்கொரியா, தாய்லாந்து மற்றும் டுனிசியா சுற்றுமுறையில் வரும் நாடுகளாகும். ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகள் சேர்ந்து வாக்களித்து இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.