நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று   கடலுக்கடியில் உணவகம் ஒன்றை திறக்க திட்டமிட்டுள்ளது.

கடற்கரையில் உணவகங்கள் அமைந்திருப்பது  சாதாரண விசயம்தான்.   ஆனால் நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் ஒன்றை திறக்க திட்டமிட்டு இருக்கிறது. இதன் நுழைவுவாயில் பகுதி  கடற்கரையில அமைந்திருக்கும். ஆனால் உணவகம், கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும்.

வரும் 2019 ஆம் வருடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  இந்த உணவகம் திறக்கப்பட இருப்பதாகவும் இதன்  நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த உணவகத்தில் ஒரே நேரம் 80 முதல் 100 பேர் வரை உணவருந்தலாம். முன்பதிவு அவசியம்.

மூன்று பிரிவுகள் கொண்ட இந்த உணவகத்தில் மது விரும்பிகளுக்காக தனியான அரங்கு ஒன்றும் வடிவமைக்கப்பட இருக்கிறது.

இந்த உணவகத்தில் கடல் உணவுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்  எனவும், உள்ளூர் உணவுகளும் பரிமாறப்படும் எனவும் உணவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.