சென்னை

ஊரடங்கு உத்தரவிற்கு இடையிலும் சென்னை மண்டல சுங்கத்துறை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துறைமுகம், விமானநிலையம், ஏர் கார்கோ, வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய கொரியர்களுக்கான முனையம் என அனைத்து இடங்களிலும் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசரகால மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதற்கான உதிரிபாகங்கள் போன்றவற்றிற்கு முன்னுரிமையளித்து அனுமதிப்பது, இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டவர்களை அழைத்துச் செல்ல வரும் சிறப்பு விமானத்திற்கான அனுமதி, வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் வரும் இந்தியர்களையும் அவர்களது உடைமைகளையும் தனி வழியில் அனுப்புவது என, அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.