சென்னை

ன்று நடைபெறும் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு கட்டுப்பட்டு இயந்திரம் பழுதடைந்துள்ளது.

இன்று காலை 8 மணி முதல் ஆர் கே நகர் இடைத்தேர்தல் துவங்கி உள்ளது.   இந்த தேர்தலுக்காக பழைய வண்ணாரப் பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.   இன்று காலை வாக்குப் பதிவுக்கு முன் மாதிரி வாக்கு பதிவு சோதனை நடைபெற்றது.

அந்த சோதனையின் போது வாக்குப் பதிவு கட்டுப்பாடு இயந்திரம் பழுது அடைந்து உள்ளது கண்டறியப்பட்டது.    அதிகாரிகள் அதை சரி செய்யும் முயற்சியில் ஈடு பட்டு வருகின்றனர்.   இந்த செய்தி பதிவாகும் வரை இயந்திரம் சரி செய்யும் பணி நிகழ்ந்து வருகிறது.

சுமார் 8.20 மணிக்கு வந்த செய்தியின் படி இயந்திரக் கோளாறு சரிசெய்யப் பட்டு வாக்குப் பதிவு துவங்கி உள்ளது