தராபாத்

முன்னாள்மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன்  மாரடைப்பில் மரணம் அடைந்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரு பண்டாரு தத்தாத்ரேயாவின் மகன் பண்டாரு வைஷ்ணவ்.   இவர் தனது தந்தையுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.   பண்டாரு வைஷ்ணவுக்கு 21 வயதாகிறது.   இவர் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

நேற்று இரவு வைஷ்ணவ் தனது குடும்பத்தினருடன் உணவு அருந்திக் கொண்டிருந்த போது திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.   இவர் உடனடியாக முஷீராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இன்று அதிகாலை சுமார் 12.30 மணிக்கு அவர் மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார்.