ராணி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில், இசையமபைபாளர் இளையராஜா, நட்சத்திரங்கள், சாய் தன்ஷிகா , இயக்குநர் பாணி , தயாரிப்பாளர் முத்து கிருஷ்ணன் , இயக்குநர் சமுத்திரகனி , நடிகர் நமோ நாராயணன் , இயக்குநர் கரு,பழனியப்பன் , இயக்குநர் பேரரசு , நடிகர் மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேரரசு
விழாவில் பேரரசு

விழாவில் இயக்குநர் பேரரசு பேசியது சுவாரஸ்யமாக இருந்தது.யது.
“நாம் எல்லோரும் பயணத்தில் கேட்கும் பாடல்கள் அனைத்தும் இசை ஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தான். அவருடைய பாடல்களை கேட்டால் 2,000 கிலோ மீட்டர் தாண்டி கூட பயணித்துக்கொண்டே இருக்கலாம்.
இந்த, “ராணி” படத்தின் அனைத்து பாடல்களும் மனதை கவரும் வகையில் உள்ளது. இப்படிப்பட்ட சிறந்த பாடல்களை இசைஞானி இளையராஜா அவர்களால் தான் உருவாக்க முடியும்” என்றார்.
பிறகு, “என் வாழ்நாளில் இரண்டே இரண்டு பேரை பார்த்து தான் பொறாமை படுகிறேன். ஒருவர் என்னுடைய முன்னாள் காதலியின் கணவர். அடுத்து.. இசை ஞானி இளையராஜாவின் இசையில் படம் இயக்கும் இயக்குநர்கள் மீது பொறாமை உண்டு. அந்த விதத்தில்  “ராணி” படத்தின் எனக்கு இயக்குநர் பாணி மீது மிகப்பெரிய பொறமை உண்டு.
நான் இசைஞானி இளையராஜா அவர்களை கவரும் வகையில் கதையை தயார் செய்து நிச்சயம் அவருடைய இசையில் ஒரு படத்தை இயக்குவேன்” என்று பேரரசு பேசி முடிக்க… கூட்டத்தில் கைதட்டல் அரங்கை அதிரவைத்தது.