சிவங்கை,

மிழக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திராவின் சகோதரர் தேவ பாண்டியன்  சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின்போது, அமைச்சராக இருந்தவர் கோகுலஇந்திரா. இவரது தம்பி தேவ பாண்டியன் (வயது 52). இவர் சொந்த வேலை காரணமாக சிவகங்கை சென்றபோது  ஒக்கூர் அருகே அண்ணாநகர் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கோகுல இந்திராவின் அண்ணன் தேவபாண்டியன்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையறிந்த அந்த பகுதி போலீசார் அவர் உடைலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தகவலறிந்த உடன் கோகுல இந்திரா சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு விரைந்தார். அங்கிருந்து கார் மூலம் சிவகங்கை சென்றுள்ளார்.