தூத்துக்குடி,

த்திய அரசு நடத்தும அனைத்துவிதமான தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் தேர்வு மையங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில், அறிவியல் பூங்கா மற்றும் ஆய்வகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்துவிதமான தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் தேர்வு மையங்கள் தொடங்கப்படும் என்றும்,

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுடன்,  ஆதார் எண்ணுடன் இணைத்து புதிய கார்டு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.