டெல்லி:
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக  பல நாடுகளில் விமான சேவை முடக்கப்பட்டுஉள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பல நாடுகளில் சிக்கித்தவித்து வருகின்றனர். அவர்கள், தங்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதனால், சர்வதேச விமான சேவைகளை  தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து, அமெரிக்கா தென் அமெரிக்க ஜெர்மனி உள்ளிட்ட நதிகளுக்கு கூடுதல் விமானம் இயக்கப்படும் என்றும்,  ஜூன் மாதத்தில் இருந்து .வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவ கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.