டெல்லி: உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலை தளங்கள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதன் பயன்பாட்டாளர்கள் மிக அதிகம்.

ஆனால் இரவு 8 மணியளவில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியது. பேஸ்புக் மெசஞ்சரும் வேலை செய்யவில்லை. 1 மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியதால் பயனாளர்கள் தவித்து போயினர்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இதே போன்று  பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் ஒட்டுமொத்தமாக முடங்கின. அதன்பிறகு இப்போது தான் அதன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.