மும்பை: முகக்கவசம் மட்டும் தான் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பாதுகாப்புக் கவசம் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய  மாநிலங்களில் தினமும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் அமராவதி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: சத்ரபதி சிவாஜி காலத்தில் நடந்த போர்களில் வாள்களும், கேடயங்களும் பயன்படுத்தப்பட்டாலும், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முகக்கவசம் மட்டுமே பாதுகாப்பு ஆயுதம்.

கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் போரிட்டு வருகிறோம். மக்கள் முகக்கவசத்தை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது என்று கூறினார்.