டில்லி:

இந்தியர்கள் 5.6 லட்சம் பேரின் பேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் இந்தியர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடிவிட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப்பட்டது. இதன் பேரில் மத்திய அரசுக்கு பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.

அதில்,‘‘தகவல் திருட்டு காரணமாக 5.6 லட்சம் இந்தியர்களுக்கு சிறிய அளவில் பாதிப்பு இருக்கும். இந்தியாவில் 335 பயனாளர்கள் ‘‘திஸ்இஸ்யுவர்டிஜிட்டல்லைப்’’ (tலீவீsவீsஹ்ஷீuக்ஷீபீவீரீவீtணீறீறீவீயீமீ) என்ற செயலியை பயன்படுத்தியுள்ளனர். இது பயனாளர்களின் தகவல்களை சட்டவிரோதமாக கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனத்திற்கு அளித்துள்ளது.

இந்த செயலியை பயன்படுத்திய நபர்களின் நண்பர்களாக இருக்கும் 5 லட்சத்து 62 ஆயிரத்து 120 பேரின் தகவல்களும் திருடப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் 0.6% இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு 9ம் தேதி முதல் தகவல் அனுப்பப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.