கேரளாவில் சமூக ஊடகங்களில் மருத்துவர் என்ற பெயரில் பலரும் கொரோனா வைரஸுக்கு மருந்துகள் பரிந்துரை செய்து வருகின்றனர்.

இதனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டன. இதனைப் பரப்பியவர் யார் என்பதை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர், இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.