அனந்த்,                                                 இஷா,                                          ஆகாஷ்

மும்பை

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மூன்றாம் மகன் அனந்த் அம்பானிக்கு திருமண நிச்சயம் நடந்ததாக பொய்த் தகவல்கள் பரவி வருகின்றன

ரியலன்ஸ் ஜியோ வின் அதிபர் முகேஷ் அம்பானி.  இவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.   இதில் முதல் மகனான ஆகாஷ் அம்பானிக்கும் ஸ்லோகா மேத்தாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.    அதன் பிறகு ஆகாசின் இரட்டை சகோதரி ஆன இஷாவுக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் இந்த மாதம் ஏழாம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மூன்றாம் மகனான அனந்த் அம்பானிக்கும் ராதிகா மர்ச்சண்ட் என்னும் பென்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின.   அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகியது.

இந்த செய்தியை முகேஷ் அம்பானியின் மனைவியும் அனந்த் அம்பானியின் தாயுமான நீடா அம்பானி மறுத்துள்ளார்.    அவர் தனது முதல் மகனுக்கும் மகளுக்கும் நிச்சயமாகி உள்ளது மட்டுமே உண்மையான தகவல் எனவும் மூன்றாம் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வரும் செய்திகள் தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.