சிங்கப்பூர்,

னது குடும்ப விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதற்குாக மக்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார் அந்த நாட்டுப் பிரதமர் லீ சியென் லூங்.

பொதுமக்களிடம் முகநூல் சமுக வலைதளம் மூலம் உரையாற்றிய லீ, பேசியதாவது: “எண் 38 ஆக்ஸ்லி ரோட்டிலுள்ள எங்களின் குடும்ப வீடு தொடர்பான விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்தப் பூர்வீக வீடு பற்றி கடந்த சில நாள்களாக என் சகோதரர்களுக்கும் எனக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவிவருவது உண்மையே. எனக்கும், என் உடன்பிறந்தவர்களுக்கும் இடையிலான இந்த சர்ச்சைக்காக நான் சிங்கப்பூர் மக்களாகிய உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விவகாரம், என்னையும் எனது அமைச்சரவையைச் சார்ந்த உறுப்பினர்களையும் நாட்டை நிர்வகித்து வரும் எங்கள் பொறுப்பிலிருந்து நிச்சயம் திசை திருப்பாது என்று நான் உங்களிடம் உறுதி கூறுகிறேன்” என்று லீ தெரிவித்தார்.

பிரதமர் ஒருவர், தனது குடும்ப விவகாரம் குறித்து வெளிப்படையாக அறிவித்து மன்னிப்பு கேட்டதோடு, இது நாட்டின் நிர்வாகத்தை பாதிக்காது என்றும் தெரிவித்திருப்பது உலக மக்களை நெகிழ வைத்துள்ளது

சிங்கப்பூரின் தந்தை’ என்றழைக்கப்படும் லீ குவான் யூ-வின் மூத்த மகன்தான் இந்த லீ சியென் லூங் என்பது குறிப்படித்தக்கது.

[youtube https://www.youtube.com/watch?v=5ItJ7GH0dK0]