சென்னை:

து போதையில் வாகனம் ஓட்டிய பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் காவல்துறை சோதனையில் சிக்கினார்.

மது போதையில் வாகனங்களை செலுத்துபவர்களை பிடிப்பதற்காக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும்  காவல்துறையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு 9 மணிக்கு மேல் நகரத்தின் முக்கிய சாலைகள் மட்டும் இன்றி, சிறு சிறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில்  நேற்று இரவு சென்னை கதீட்ரல் சாலையில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.  அந்த காரை பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான பி.எல்.தேனப்பன் ஓட்டி வந்தார். அப்போது அவரை காவல்துறையினர்  பரிசோதித்த போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது..

இதனை தொடர்ந்து அவரது காரை பறிமுதல் செய்த காவலர்கள், , பி.எல்.தேனப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.