சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை சூளைமேட்டில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இது தொடர்பாக அவர்  வீடியோ ஒன்றையும்  வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில்,அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில், எஸ்.பி.பி.  உடல்நலம் சீராக இருப்பதாகவும் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவுதெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.  நேற்று இரவு எஸ்.பி.பியின் உடல்நிலை  மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் அவருக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.