டிகர் வடிவேலுவின் காமெடி ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதுவும் மீம் கிரியேட்டர்கள் அவரை தங்களது கடவுள் என்று கூறுகின்றனர். அவர் இல்லாமல் மீம்ஸ் வருவதே இல்லை என்றாகிவிட்டது.


கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக படங்களில் நடிக்காமல் இருக்கும் வடிவேலு விரைவில் கமலின் ’தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்க உள்ளார். வடிவேலுவின் காமெடி அத்தியாயம் மீண்டும் விரைவில் தொடங்க உள்ளது.
குருஷேத்ரம் என்ற படத்தில் வடிவேலுவின் ஊத்தாப்ப காமெடி ஸ்பெஷல். ’மாவு எடுத்து கல்லுமேல் ஊத்தி பரபரன்னு வெங்காயம் தூவி,, நெய் ஊற்றி.. அப்படியொரு திருப்பு இப்படியொரு திருப்பு’ என ஒட்டல் சர்வரிடம் ஊத்தாப்பம் ஆர்டர் செய்வார் வடிவேலு. ஆனால் அந்த ஊத்தாப்பம் அவருக்கு கிடைக்காது. வடிவேலு சொன்ன வர்ணணையெல்லாம் கேட்டுவிட்டு அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்று சாதாரணமாக சொல்லிச் செல்வார் சர்வர்.
வடிவேலுவின் ஊத்தாப்பம் ஆசையை தற்போது ரசிகர் ஒருவர் நிறைவேற்றி இருக்கிறார். வடிவேலு எப்படியெல்லாம் சொல்கிறாரோ அப்படியெல்லாம் செய்து ஊத்தாப்பம் ரெடி செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் ரசிகர். அது வைரலாகி இருக்கிறது.