பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.
வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலால்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் சாடி வருகின்றனர் . ஒரு சில இடங்களில் அவர்களின் உருவ பொம்மைகளை கொளுத்தவும் செய்தனர் . வாரிசு நடிகர்களின் படங்களை புறக்கணிக்குமாறு சமூகவலைத்தளத்தில் போராட்டங்களும் வெடித்தன .
இவரது மரணம் பாலிவுட் உலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுஷாந்த் பிறந்த ஊரில் உள்ள ஒரு சாலை மற்றும் ஒரு ரவுண்டானாவுக்கு சுஷாந்த் பெயரைச் சூட்டுமாறு புர்னியா மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட புர்னியா மேயர் சவிதா தேவி, மதுபானியிலிருந்து மட்டா சவுக் செல்லும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி அங்குள்ள ஃபோர்ட் கம்பெனி ரவுண்டானாவுக்கு சுஷாந்த் சிங் ரவுண்டானா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.