டெல்லி: டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாககூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி எல்லையில், போலீசாரின் தடைகளை உடைத்து, விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். அப்போது திடீரென டிராக்டருடன் ஒரு குழுவினர் டெல்லிக்குள் நுழைந்தனர். அவர்களை தடுக்க முயன்ற போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்வது போல பயமுறுத்தியும், காவல்துறையினர் எச்சரிக்கையை மீறியும் உள்ளே நுழைந்தனர்.  இதனால், போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடியும் நடத்தினர். பல இடங்களில் கண்ணீர் புகை குண்டும் வீசினர். தொடர்ந்து முன்னேறிய விவசாயிகள்  செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அத்துடன் செங்கோட்டையில் ஏறி போராட்டம் நடத்தினர்.  அங்கு விவசாயிகளின் கொடியையும் ஏற்றினர். விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், டிராக்டரை ஓட்டிய விவசாயி ஒருவர் மரணம் அடைந்துள்ளதார். அவர்மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.