சென்னை,

மிழக விவசாயிகள் பிரச்சினை குறித்து அனைத்துக்கட்சி கூட்டததை கூட்டுகிறது திமுக.

தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். மேலும், தலைநகர் டில்லியில் கடந்த 31 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட திமுக ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில்  உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றும்,  கூட்டத்துக்கான அழைப்பை ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்ட உள்ளது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.