புதுடெல்லி:
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைகிறது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, விவசாய சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, விவசாயிகள் 16-வது நாளாக டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நாளை முதல் நாடு முழுவதும் அனைத்து சுங்கச் சாவடிகளிலும், கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.