ஸ்ரீநகர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக அவரது மகன் உமர் அப்துல்லா வெளியிட்ட டுவிட்டர் பதிவின் விவரம் வருமாறு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எனது தந்தை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தற்போது ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்று கூறி உள்ளார்.

மார்ச் 30ம் தேதி கொரோனா தொற்று பாதித்த பரூக் அப்துல்லா, ஆரம்ப கட்டத்தில் வீட்டுத் தனிமைப்படுத்துதலில் இருந்தார். அதன் பின்னர் மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

முன்னதாக பரூக் அப்துல்லா தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை மார்ச் 2ம் தேதி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.