டில்லி:

காஷ்மீர் எம்.பி.,ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்ற மேலவையில் தகவல் தெரிவித்தார்..

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அது தொடர்பான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையதள வசதிகள் முடக்கப்பட்டன. தொடர்ந்து மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முக்தி போன்றோர் எந்தவித அறிவிப்புமின்றி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டது.  திமுக உள்பட பல கட்சி எம்.பி.க்கள், மாநிலங்களவை உறுப்பினரான பரூக் அப்துல்லாவை, பாராளுமன்ற சபாநாயகருக்கு தெரியாமல் கைது செய்து இருப்பதாக குற்றம் சாட்டினர். இந்த சபையின் உறுப்பினர் திரு ஃபாரூக் அப்துல்லாவைக் காணவில்லை. அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் குறித்து, எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. சபாநாயகராக நீங்கள் உறுப்பினர்களைப் பாதுகாக்க வேண்டும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆவேசமாக பேசினார்.

இந்த நிலையில்,:ஃபாரூக் அப்துல்லா கைது செய்யப்படவோ, தடுத்து வைக்கப்படவோ இல்லை . அவர் தனது விருப்பப்படி தனது வீட்டில் இருக்கிறார்” என்று ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.