சேலம் அருகே இரண்டரை ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டு தகராறு செய்த மகன், தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், சங்ககிரி, வைகுந்தம் ஊராட்சி, வேடிச்சிக்காட்டை சேர்ந்தவர் விவசாயி சின்னபழனி. இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன்கள் துரைசாமி, சுப்ரமணி. துரைசாமி 10 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். நேற்று மாலை 5.15 மணிக்கு சின்னபழனிக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுக்குமாறு சுப்ரமணி கேட்டு தகராறு செய்தார். அவர் கொடுக்க மறுத்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரம் அடைந்த சுப்ரமணி அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து சின்னபழனி நெற்றியில் வெட்டினார். அதில் சம்பவ இடத்திலேயே சின்னபழனி உயிரிழந்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் சுப்ரமணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது தந்தையின் சொத்தில் தனக்கான பாகத்தை பிரித்து கொடுக் காத ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவர் கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்கிறார்கள்.