சிராபாத்

பாகிஸ்தானில் உள்ள ஒரு இளைஞர் தாம் காதலித்த பெண்ண மணக்க விரும்பியதால் அவர் தந்தை அவருடைய கண்களை நோண்டி எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் பலிசிஸ்தான் மாநிலத்தில் உள்ள நசிராபாத் என்னும் ஊரில் அப்துல் பாசி என்னும் 22 வயது இளைஞர் வசித்து வந்தார்.   அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார்.   அவருடைய தந்தை மற்றும் சகோதரர்களுக்கு இந்த காதலில் ஒப்புதல் இல்லை.   ஆயினும் அப்துல் பாசி அந்தப் பெண்ணையே மணக்க விரும்புவதாக கூறி உள்ளார்.

இதனால் சகோதரர்களும் தந்தையும் அவரிடம் வாய்ச்சண்டை போட்டுள்ளனர்.  வாக்குவாதம் முற்றியதால் அவருடைய தந்தை மற்றும் சகோதர்கள் இவரை தாக்கி உள்ளனர்.    அப்துல் பாசியை அவ்ருடைய சகோதரர்கள் பிடித்துக் கொள்ள அவருடைய தந்தை மேஜைக் கரண்டி போன்ற ஒரு ஆயுதத்தினால் அவ்ருடைய கண்களை நோண்டி எடுத்துள்ளார்.

அவருடைய சகோதரர்கள் அவருடைய கை நரம்புகளை அறுத்துள்ளனர்.  இதைக் கண்டு பயந்து போன அப்துல் பாசியின் தாய் கூச்சல் இட்டுள்ளார்.   அந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அப்துல் பாசியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.    காவல்துறையினர் அவர் தந்தையையும் சகோதரர்களையும் கைது செய்துள்ளனர்.