கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ் தொற்றுநோய்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும்மருத்துவரின் பரிந்துரை இன்றி கடைகளில் நேரடியாக வாங்கக் கூடிய மேல்பூச்சு மருந்து ஒன்று நிவாரணம் அளிப்பதை அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுபாட்டு ஆணையம் உறுதி செய்துள்ளது.

வாஷிங்டன்: உலகளவில் இதுவரை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற கொடிய கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முறையாக  மேல்பூச்சு மருந்து ஒன்றை அமரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று சோதனை செய்துள்ளது.கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ் தொற்றுநோய்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும், கொல்லவும் இம்மருந்து பயன்படுகிறது என்பதை உறுதி செய்துள்ளனர். இம்மருந்து மருத்துவரின் பரிந்துரை இன்றி கடைகளில் நேரடியாக வாங்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.  “ஆய்வக அறிக்கையின்படி, இம்மருந்து பயன்படுத்தப்பட்ட 30 விநாடிகளுக்குப் பிறகு எந்த தொற்று வைரஸும் கண்டறியப்படவில்லை” என்று மருந்து நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லண்டனை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி ஆய்வகமான வைராலஜி ரிசர்ச் சர்வீசஸ் லிமிடெட், கொரோனா வைரஸ் (என்.எல் 63) மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸுக்கு எதிராக APT ™ T3X என பெயரிடப்பட்ட மேல்பூச்சு மருந்தின் வைரஸ் எதிர்ப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்து, இது கொரோனா வைரஸுக்கு எதிரான மிகவும் பயனுள்ளதாக இருப்பதை முடிவு செய்துள்ளனர். APT ™ T3X வைரஸ் தொற்றுநோயை சில நொடிகளில் திறம்பட செயலிழக்கச் செய்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

“சோதனைகளின் நிபந்தனைகளின் கீழ், மனித கொரோனா வைரஸ் என்எல் 63 க்கு எதிராக இம்மருந்து 99.9% வைரஸ் எதிர்ப்பு செயல்பாட்டைக் காட்டுகிறது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு மாதங்களுக்கு மேலாக சோதனை செய்யப்பட்டது. அனைத்து உறுதியான வைரஸ் எதிர்ப்பு மதிப்பீடுகளும் மும்மடங்காக செய்யப்பட்டன. இந்த தயாரிப்பு ஆரம்பத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாக்டீரியா தொற்று நோய்களுக்கான எதிர்ப்பு மருந்தாக உருவாக்கப்பட்டது, ஆனால் இது கூடுதலாக சக்திவாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகளையும் வழங்குகிறது. இது ஆவணப்படுத்தப்பட்ட பக்க விளைவுகளைக் கொண்டிருக்கவில்லை.

உலகளவில் இதுவரை மொத்தம் 22,864,873 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கோவிட் வள மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thank you: India times